கண்டறியாதன கண்டேன் - சின்ன அண்ணாமலை - வாசிப்பனுபவம்
சுதந்திர தாகத்தை தீர்க்க பேசிய ஒரு பேச்சாளனை சிறையில் அடைத்த போது மக்களே திரண்டு சிறையை உடைத்து அவரை விடுதலை செய்தார்கள் என்றால் நம்ம முடிகிறதா?
ஆம் !!!
அதுவும் இந்த தமிழ்நாட்டில்தான் நடந்தது.
இந்த சின்ன அண்ணாமலைக்காக தான் நடந்தது.
சின்ன அண்ணாமலையின் பயண நூல்தான் கண்டறியாதன கண்டேன். நவாப் ராஜமாணிக்கம் முலம் பாரதி மணி மண்டபம் நிதி திரட்டல், கல்கியின் விமர்சனம், ரசிகமணியின் ரசனை, சபாநாயகர் ஸ்ரீ சிவசண்முக பிள்ளை உடனான திருநெல்வேலி, இராமேஸ்வரம் ஆலய பிரவேசம், திருநெல்வேலி ஜில்லா காங்கிரஸ் தலைவர்கள், சங்கரன்கோவில் தூண்கள் சொல்லும் வரலாறு, தூத்துக்குடி கோவிலில் தமிழில் அர்ச்சனை, திருநெல்வேலி சிவாச்சாரியார்களின் சிறப்பு, வங்காள பயணம் விசுவ பாரதியில் அண்ணாமலை செட்டியார் வழியாக செய்த தமிழ்த்தொண்டு என டிகேசியோடும் கல்கியோடும் சின்ன அண்ணாமலையால் நாமும் பயணிக்கலாம்.
ஒரு வாசகனுக்கு இதை விட வேறு என்ன வேண்டும்.
கண்டறியாதன கண்டேன்,
சின்ன அண்ணாமலை,
சந்தியா பதிப்பகம்.
சின்ன அண்ணாமலை,
சந்தியா பதிப்பகம்.
Comments
Post a Comment