விவாதங்கள்



வரையறுக்க முடியாததுதான் ஆனால் வரம்புக்குள் இருக்க வேண்டும். சமீபத்திய விவாதங்கள் பெரும்பாலும் மையக்கருத்து மறைந்து மேற்கோள்களும் உவமைகளும் மட்டுமே அடுத்த அடுத்த கேள்விகளை தீர்மானித்து கொண்டு இருக்கிறது. பதில்கள் எதிர்பார்த்தால் கிடைப்பது எனோ எதிர்கேள்விகள் மட்டுமே. கேள்விகளின் எண்ணிக்கை உயர்வதால் மட்டுமே ஒரு விவாதம் சிறப்பாகாது. விவாதம் உரையாடலாக மாறலாம் தவறில்லை அதுவும் ஒருவகை தீர்வுதான் முழுமையான தீர்வில்லை என்றாலும் தீர்வினை நெருங்குவதற்கான அறிகுறி. எந்த கேள்விகளை யார்வேண்டுமானாலும் எழுப்பலாம் அதற்கு ஒன்றும் தகுதி தேவையில்லை ஆனால் அவை விவாதத்தின் மைய கருத்தை ஒட்டி இருக்க வேண்டும். சமரசங்களும் பின்வாங்கலும் எதன் அடிப்படையில் நிகழ்கிறது என்பதை பொருத்தே விவாதத்தின் முடிவு. எதிர் கருத்துள்ளவர் எல்லாம் எதிரிகள் அல்ல மற்றும் பயன்படுத்தும் சொல்லாடல் அதிக கவனம் கொள்ளத்தக்கவை. பெரும்பான்மை விவாதங்கள் சொல்லாடல்களால் சிதைந்து இருக்கிறது. வசப்படுத்துதலும் வயப்படுதலுமே இங்கு தீர்வல்ல. மையக்கருத்து அடுத்தக்கட்ட தேடலுக்கு உட்படுமாயின் அதுவே சிறப்பு.

Comments

About Me

Rathinasamy

Rathinasamy

Surandai Chennai

Blog Archive