தெய்வம் என்பதோர்... - தொ. பரமசிவன் - வாசிப்பனுபவம்


பண்பாடு குறித்த ஆய்வுகளை அறிய இந்த புத்தகம் உதவும். வரலாறுகள் எப்போதும் கோட்டைகளையும் கற்கோவில்களையும் சுற்றிய படியே உள்ளது. இந்த வரலாறு வெறும் அரசியல் வரலாறுகளாக மட்டுமே இருக்கிறது. நுண்அரசியல் வரலாறு எப்போதும் நமக்கு வியப்பாகவும் சாட்சியங்கள் போதாமைகளாகவும் இருந்து வருகிறது. இந்த புத்தகம் விரிவான தகவல் இல்லை என்றாலும் கட்டுரையில் காட்டப்படும் மேற்கோள்கள் அந்த போதாமைகளை மறுபரிசிலனைக்கு உட்படுத்துகிறது. நுண்அரசியலை புரிந்து கொள்ள உதவுகிறது.

சிறுதெய்வங்கள் எப்படி பெரும் தெய்வங்களாக மாற்றப்பட்டு இருக்கிறது. தாய்த் தெய்வ வழிபாடு மீது இந்த மக்கள் கொண்டு இருந்த நம்பிக்கை. வட்டாரத்திற்கு வட்டாரம் அவற்றில் இருந்த மாறுபாடு மற்றும் பிற மதங்கள் கூட இங்கு கால் உன்ற தாய்த் தெய்வங்களையே அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ஒரு சமணக் கோவில் என்ற கட்டுரை எளிய மக்கள் மதங்களை எப்படி அணுகுகிறார்கள் என்பதை புரியவைக்கிறது. வள்ளலார், ஆழ்வார்கள், ஆண்டாள், பக்தி இலக்கிய ஆய்வுகள் என தொப தெறிக்கவிட்டு இருக்கிறார். பண்பாடு எவ்வாறு பரிணமித்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

Comments

About Me

Rathinasamy

Rathinasamy

Surandai Chennai

Blog Archive