நீர் பிறக்குமுன் - இந்திரா - வாசிப்பனுபவம்


"சாப்பிடுகிற சாப்பாட்டிலிருந்து, அதில் கிடக்கிற கல்லிலிருந்து, குடிக்கும் தண்ணீர்வரை அரசியல் இருக்கிறது. காற்றைப் போலக் கண்ணுக்குத் தெரியாதபடி அரசியல் எங்கும் தன் அடர்ந்த நிலழைப் பரப்பியிருக்கிறது. அதிலிருந்து யாரும் தப்பித்துவிட முடியாது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது நம்மை ஒரு நிழலைப் போல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்கு வெளியே பார்வையாளராய் இருப்பதும் அதை விமர்சிப்பதும் எளிதானது. ஆனால் பங்கேற்பாளராய் இருப்பது ?"    

22 வயதில் ஒரு இளம் அரசியல்வாதி சந்திக்கும் பிரச்சனைகள் அதுவும் ஒரு பெண்ணாக தான் சார்ந்த சமூகத்திற்கு எதிராக தன்னை வளர்த்த மாமாவின்  அறிவுரைகளையும் தாண்டி நிற்பது அதில் வெற்றியும் பெறுவது என்பது எல்லாம் அவ்வளவு எளிதல்ல. சாதியின் ஆதிக்கம், அதிகாரிகளின் அலட்சியம், தன் இயலாமை மற்றும் தான் கையாண்ட வழிமுறைகளை நேர்மையாக பதிவு செய்து இருக்கிறார்.

நம் மனதில் உள்ள மாசுகளை கண்டறியவும் விரட்டவூம் செய்கிறது.

இளம் அரசியல்வாதிகள், அரசியல் ஆர்வலர்களுக்கும் குறிப்பாக அரசியல் ஒரு சாக்கடை என்று ஏளனம் செய்பவர்களுக்கும் இந்த நூலை பரிந்துரை செய்கிறேன்.                

Comments

About Me

Rathinasamy

Rathinasamy

Surandai Chennai

Blog Archive