சிவகாமிக்கு மட்டுமல்லவா தெரியும் !!!


அரசியல் தெரியாதவனாம் நீ ?
அரியாசனம் விரும்பாத அரசியல் ராஜதந்திரி அல்லவா நீ !!!

சத்திய மூர்த்தியின் சீடனாம்  நீ ?
சத்தியத்தின்(சத்திய மூர்த்திக்கும்) தலைவன் அல்லவா நீ !!!

ஜவகரின் உறக்கம் தொலைத்தவனாம் நீ ?
ஜவகருக்கு பின் ஜனங்களை காத்தவன் அல்லவா நீ !!!

காந்தியின் தொண்டனாம் நீ ?
கருப்பு காந்தி அல்லவா நீ !!!

சாதிக்கு தலைவனா நீ ?
சமூக நீதி பேசிய தலைவன் அல்லவா நீ !!!

இனிமையானவனாம் நீ ?
இரக்கம் இல்லாதவன் என்பது சிவகாமிக்கு மட்டுமல்லவா தெரியும் !!!

Comments

About Me

Rathinasamy

Rathinasamy

Surandai Chennai

Blog Archive