பொது புத்தியை தாண்டி சிந்திக்கும் அரசியல்வாதிகள் நமக்கு தேவை


இங்கு இவ்வளவு நாள் மதுக்கு எதிரான போராட்டம் நடத்திய சசிபெருமாள், மதுரை சட்ட கல்லூரி மாணவி நந்தினி,பெரியவர் குமரி ஆனந்தன் போன்றவர்கள் யாரையும் பெரிதாக ஈர்க்கவில்லை பலருக்கு அவர்களை யார் என்றும் தெரியாது. சசி பெருமாள் மரணத்திற்கு பின்னர் அரசியல் கட்சிகளால் நடைபெற்று கொண்டு இருக்கும் இந்த போராட்டங்கள் வெறுமனே தேர்தல் அரசியலுக்கான ஒரு நாடகம் மட்டுமே.

சட்ட பேரவை தேர்தல் நடைபெற்று பெற்று ஒரு வருடத்திற்குள் இந்த மரணம் நடைபெற்று இருந்தால் இங்கு இந்த போராட்டம் கூட நடைபெற்று இருக்காது. யாரோ ஒருவர் மது கடைக்கு எதிராக போராட்டம் நடத்தி உயிர் நீத்தார் என்பது வெறும் செய்தியாக மட்டுமே நமக்கு கிடைத்து இருக்கும்.

அப்படியே ஒரு சமூக போராளியின் மரணம்தான் இங்கு மது ஒரு பிரச்சினை நாம் அதை எதிர்த்து போராட வேண்டும் என்ற தாக்கத்தை அரசியல்வாதிகளுக்கு ஏற்படுத்தி இருந்தால் பிரச்சினைக்கு தீர்வு கண்டுபிடிக்க மட்டுமே தேவையென்றால் அப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நமக்கு தேவையில்லை. பொது புத்தியை தாண்டி சிந்திக்கும் அரசியல்வாதிகள் நமக்கு தேவை.

அரசியல் என்பது வெறும் உணர்வு பூர்வமாக அணுக வேண்டிய ஒன்று அல்ல.உள்ளுணர்வோடு அறிவுபூர்வமாக அணுக வேண்டிய ஒன்று.

உள்ளுணர்வோடு செயல்படும் அரசியல்வாதிகள் நமக்கு கிடைக்கும் வரை இங்கு பிரச்சினைகள் உருவாகி கொண்டேதான் இருக்கும். இருக்கும் அரசியல்வாதிகளால் இங்கு எதையும் தடுக்க முடியாது. அவர்களின் அரசியல் அதிகாரத்தை நோக்கி பயணமாகவே மட்டுமே இருக்கும் அவர்களுக்கு கிடைக்கும் அதிகாரத்தால் மக்களுக்கு இங்கு எந்த பயனும் கிடைக்கபோவது இல்லை.

Comments

About Me

Rathinasamy

Rathinasamy

Surandai Chennai

Blog Archive